Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேருக்கு நீதிமன்றம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேருக்கு நீதிமன்றம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை உத்தரவு!!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 பேருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இம்மாவட்டத்திலுள்ள 12 காவல் நிலையங்களாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மே-18 முள்ளிவாய்க்கால் நினைந்வேந்தல் அனுஷ்ட்டிக்கப்படவிருந்த நிலையிலேயே இந்த தடை பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதித்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |