Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்- மொத்த எண்ணிக்கை 1222ஆக அதிகரிப்பு!!




மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 35 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.


இவர்களில் அதிகமானோர் மட்டக்களப்பு சுகாதார பிரிவைச் சேர்ந்த 15 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய பரிசோதனை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐந்து பேரும் ஓட்டமாவடி வெல்லாவெளி ஏறவூர் சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் தல மூன்று பேரும் செங்கலடி சுகாதார பிரிவில் இரண்டு நபர்களும் கிரான் சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஓருவருமாக மொத்தமாக 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக மட்டக்களப்பு பகுதியில் 1222 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 992 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 13 நபர்கள் மரணித்துள்ளனர் .

மூன்றாவது அலையில் இதுவரையில் மட்டக்களப்பு பகுதியில் 239 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 4 பேர் மரணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments