Home » » நாட்டில் நேற்று 1,914 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்று 1,914 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!

 


நாட்டில் நேற்றைய தினம் 1,914 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 1,860 பேர் புத்தாண்டு கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், 54 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் ஆவர்.

அதற்கு அமைவாக இலங்கையில் மொத்தமாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 115,590 ஆக பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 944 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியாசலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 99,153 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 15,728 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொவிட் தொற்று சந்தேகத்தில் 1,118 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |