மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட தனிமைப்படுத்தலில் உள்ள சின்ன ஊறணி பகுதியில் இன்று (23) கொரோனா தொற்றை கண்டறியும் முகமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கிராமசேவகர் பிரிவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதையடுத்து அந்த பகுதி கடந்த 18 ம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது.
குறித்த அன்டிஜன் பரிசோதனையானது சின்ன ஊறணியை சேர்ந்த 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்டதில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 Comments