எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சில வீதிகளின் இருமருங்குகளையும் அழகு தரும் மரக்கன்றுகளை நடும் "இயற்கையால் துறையூரை அழகுபடுத்துவோம் " எனும் தொனிப்பொருளினாலான மரம் நடும் நிகழ்வொன்றினை சம்மாந்துறை ரோயல் மெட்ரிட் கழகத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தனர்.
நாளுக்கு நாள் மரங்கள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மீண்டும் நடுவதன் மூலம் இயற்கையின் சுழற்சிக்கு பங்களிப்பு செய்யும் இம் முயற்சியில்
கழக வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments