Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள்!


 மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றது.


கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு மன்ரசா வீதியில் சீயோன் தேவாலயம் புதிய கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு திறக்கப்பட்டு இன்று ஆராதனைகள் இடம்பெற்றது.

இந்த நிலையில் தேவாலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றுது. இதில் நூற்றுக்கணக்கான இறை அடியார்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இராணுவத்தினர் ,கடற்படையினர், பொலிஸ் , புலனாய்வு பிரிவினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தமையையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிலையில் பல பிரதான வீதிகளில் இராணுவத்தினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இராணுவ மோட்டார் சைக்கிள் பிரிவினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments