Home » » தற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!!

தற்கொலை செய்து கொண்ட காவல்துறை பரிசோதகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!!

 


யுவதி ஒருவரை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்ட காவல்துறை உப பரிசோதகர் தொடர்பிலும் கொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு டாம் வீதியில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட யுவதியின் தலையை தேடும் நோக்கில் இன்றைய தினமும் களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கரையோர காவல்துறை பிரிவு அதிகாரிகளினால் நேற்றைய தினம் மதியம், முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரையான களனி கங்கையின் இரு பக்கங்களிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, தற்கொலை செய்து கொண்ட உப காவல்துறை பரிசோதகரின் மூத்த சகோதரி, முறையற்ற தொடர்பு காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவல்துறை பரிசோதகர் தற்கொலை செய்து கொண்ட இடத்திலேயே, அவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

காவல்துறை உப பரிசோதகரால் கொலை செய்யப்பட்ட குறித்த யுவதி, அவரின் வீட்டிற்கு சில சந்தர்ப்பங்களில் சென்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தொடர்பில் அந்த காவல்துறை உப பரிசோதகரின் மனைவி அறிந்திருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |