Advertisement

Responsive Advertisement

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

 


கொட்டகலை பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.


கடந்த முதலாம் திகதி 167 பேருக்கு மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று (03) மாலை கிடைக்கப்பெற்ற போதே மேற்படி 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொட்டகலை நகரப்பகுதியில் 10 பேர், தர்மபுரத்தில் 05 பேர் மற்றும் யதன்சைட் பகுதியில் ஒருவருமாக 16 பேர் இனம் காணப்பட்டுள்ளதுடன் இதில் கொட்டகலை பிரதேசத்திலுள்ள மூன்று பாடசாலைகளின் ஐந்து ஆசிரியர்களும் 07 மாணவர்களும் அடங்குவதாக பொது சுகாதர அதிகாரி தெரிவித்தார்.

மேலும் கொட்டகலை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments