( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
மாணவர்கள் மத்தியில் மறைந்து கிடக்கும் (அழகியல் )சித்திரம் வரைதல் திறன்களை வளர்க்கும் நோக்கில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )களுவாஞ்சிக்குடி யில் சித்திரப்பாட வளாகம் அமைக்கும் பணியில் சித்திரப்பாட ஆசிரியர்களும் மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாடசாலை அதிபர் திரு.எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனக்கமைய மேற்கொள்ளப்பட்டு வரும் இம் முயற்சிக்கு மாணவர்கள் மத்தியில் புதிய உத்வேகமொன்று ஏற்பட்டுள்ளது.
தரைச்சித்திரம் , சுவரோவியம் , வளாகத்தை பூமரங்களால் அலங்கரித்தல், சூழலுக்கு கழிவாக அகற்றப்படும் பொருட்களை கலை உணர்வுள்ள வகையில் ஒழுங்கு படுத்துதல், நீர் வீழ்ச்சி, தரம் ஆறு முதல் க.பொ.த.உயர்தரம் வரை சித்திரம் பாடத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அமைவான சித்திரங்கள் , பொருட்கூட்டம் வரைதல் , காட்சியமைப்புகள் , இலங்கையின் பிரசித்திபெற்ற ஓவியங்கள், மேலைத்தேய கீழைத்தேய ஓவியங்கள் , ஓவியச்சிற்பங்கள் , அலங்காரங்கள் , ஒட்டுச்சித்திரங்கள் போன்ற செயற்பாடுகள் தற்போது முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இத்திட்டத்தை பாடசாலை சித்திரப்பாட ஆசிரியர்களான திரு.ஏ.கபிலேந்திரன் , திரு.எஸ்.ராகுலன் , திருமதி.எஸ்.துஸ்யந்தன் , திருமதி.ரீ.தேவறூபனி , சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோர் செயற்படுத்தி வருகின்றனர்.
0 comments: