Home » » பின்தங்கிய நிலையிலுள்ள பல மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பின்தங்கிய நிலையிலுள்ள பல மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.


 ( எம்.ஐ.எம்.அஸ்ஹர் )


விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கிராமத்திற்கு ஒரு மைதான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பின்தங்கிய நிலையிலுள்ள பல மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இதனடிப்படையில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் கடற்கரை வீதி பெளஸி விளையாட்டு மைதானமும் , கல்முனை பிரதேச செயலகப் பிரிவில் நற்பிட்டிமுனை அஸ்றப் ஞாபகார்த்த மைதானமும் , நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானமும் , அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் தீகவாபிய பொது மைதானமும் , நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் மத்திய முகாம் அமீர்அலி விளையாட்டு மைதானமும் , கல்முனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவில் பொது விளையாட்டு மைதானமும் , இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் எட்டாம் கட்டை சிங்கபுர விளையாட்டு மைதானமும் , அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச சபை விளையாட்டு மைதானமும், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உதய சூரியன் விளையாட்டு மைதானமும் , பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் ஜலால்தீன் புரம் விளையாட்டு மைதானமும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |