Home » » இராணுவ புரட்சியால் தவிக்கும் மக்கள்! அடைக்கலம் வழங்க தயாராகிறது அமெரிக்கா

இராணுவ புரட்சியால் தவிக்கும் மக்கள்! அடைக்கலம் வழங்க தயாராகிறது அமெரிக்கா

 


தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில், இராணுவ ஆட்சி மற்றும் வன்முறை காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் அந்நாட்டு மக்களுக்கு தற்காலிக அடைக்கலம் வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தீவிர ஆய்வுக்கு பிறகு ‘தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலை’ என்ற முடிவின் கீழ் மியன்மார் நாட்டவர்களுக்கு அடைக்கலம் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை செயலாளர் அலெஜான்ட்ரோ மயோர்காஸ் தெரிவித்தார்.

இதன்படி, மியான்மார் மக்கள் தற்காலிகமாக அமெரிக்காவிலேயே இருக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைத்துவிட்டு, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உட்பட 100இற்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பலர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால், போராட்டத்தை கடுமையான நடவடிக்கைகள் மூலமாக இராணுவம் ஒடுக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |