Home » » தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்- பாடசாலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு!!

தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்- பாடசாலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு!!

 


இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இதன் முதற்கட்டத்தின் கீழ் 123 தேசிய பாடசாலைகளும் இரண்டாம் கட்டமாக 673 தேசிய பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மாத்தறை - ராகுல கல்லூரியிலும், மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியிலும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டிடங்களை பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்திற்கான பாடசாலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |