Home » » கொரோனாவுடன் தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் வெளியான செய்தி

கொரோனாவுடன் தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் வெளியான செய்தி

 


பொலன்னறுவை – கல்லேல்ல பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற ஐந்து கைதிகளில் மற்றுமொரு கைதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒருவாரத்தின் பின் இவர் புத்தளம் – ஆராய்ச்சிகட்டு பகுதியில் மறைந்திருந்த நிலையில் இன்று கைதாகியிருக்கின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லேல்ல சிகிச்சை நிலையத்திலிருந்து கடந்த வாரத்தில் கைதிகளான 5 கொரோனா நோயாளர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.

இவ்வாறு தப்பியோடியவர்களில் ஒருவர் சிலாபத்தில் வைத்து ஏற்கனவே கைதாகி இருந்தார். இந்நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 3 பேர் தலைமறைவாகியுள்ளனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |