அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியில் கடலில் நீராடச்சென்ற நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று கடலில் நீராடச் சென்ற நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, காணாமல் போயுள்ள நபர் திருகோணமலை சேருவில பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கடமையாற்றும், பொதுச் சுகாதார வெளிக்கள அலுவலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, 28 வயதுடைய குறித்த நபருக்கு 3 வயதுடைய குழந்தை ஒன்று உள்ளதாக பொலிஸாரால் கணடறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments