Home » » மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசமானது!!

மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வசமானது!!

 


மட்டக்களப்பு- ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை புதிய தவிசாளராக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த சர்வானந்தம் இன்று(18) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2018ஆம் ஆண்டு பிரதேச சபை வட்டார தேர்தலில் வெற்றி பெற்ற 31 உறுப்பினர்களுடன் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பேரின்பம் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை தவிசாளரானார்.

3வருடம் சுதந்திர கட்சியின் ஆட்சியிலுள்ள நிலையில் இந்த வருடம் 2021ல் இடம்பெற்ற வரவுசெலவு திட்டத்தின் பின் புதிய தவிசாளருக்காக இரண்டு கட்சி உறுப்பினர்கள் போட்டியிட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 17வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 11வாக்குகளை பெற்று தோல்வியடைந்ததுள்ளது. இத்துடன் 2 வாக்குகள் நடுநிலை வாக்குகளாக அளிக்கப்பட்டன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சர்வானந்தம் 17வாக்குகளை பெற்று வெற்றியடைந்து ஏறாவூர் பற்று செங்கலடி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |