Home » » மட்டக்களப்பு- கோட்டமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு- கோட்டமுனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!!

 


மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பகுதியை சேர்ந்த பெண்னொருவர் கொரோனா தொற்று காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிசிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று (22)காலை உயிரிழந்துள்ளார்.


மட்டக்களப்பு அரசடி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கோட்டமுனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 16ஆம் திகதி 79 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த ஆணின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்றின் ஆபத்து உணரப்பட்டு அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக முடக்கப்பட்டது.

இந்த நிலையில் உயிரிழந்த ஆணின் மனைவி (71வயது) கொரோனா தொற்று காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேநேரம் அரசடி கிராம சேவையாளர் பிரிவில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன், பீசீஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 22பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை 11பேரும் இன்று பகல் 12மணி வரையான காலப்பகுதியில் பட்டிப்பளை சுகாதார பிரிவில் ஒருவருமாக இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 531பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |