Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் 5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று — 30 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்

 


மட்டக்களப்பு கனிஸ்ட வித்தியாலயத்தில் 5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று—30மாணவர்கள் தனிமைப்படுத்தலில்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்து வருகின்றது.

மட்டக்களப்பு நகரில் பிரபல கனிஸ்ட பாடசாலை  5ம் ஆண்டு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது இனறு;(29)காலை கண்டறியப்பட்டுள்ளதாக கோட்டைமுனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இம்மாணவானுக்கு தொற்று உறுதியானதையடுத்து குறித்த பாடசாலையில் அம்மாணவானின் வகுப்பில் பயிலும் 30 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றுக்குள்ளான மாணவனின் தாதி உத்தியோகத்தரான தந்தை ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாகி சிகச்சை பெற்றுவரும் நிலையில் மகனுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில தினங்களின் முன்னர் மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மிக்கேல் கல்லுரியின் 10ம் ஆண்டு மாணவனுக்கும் கொரோனா தொற்று ஏறபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments