Home » » கிழக்கில் 1493 பேருக்கு கொரோனா தொற்று; ஆறு பகுதிகள் கொரோனா சிவப்பு வளையங்களாக பிரகடனம்- மக்களை எச்சரிக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

கிழக்கில் 1493 பேருக்கு கொரோனா தொற்று; ஆறு பகுதிகள் கொரோனா சிவப்பு வளையங்களாக பிரகடனம்- மக்களை எச்சரிக்கும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்!!

 


கிழக்கில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று கிழக்கில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1493 அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் கிழக்கில் இதுவரை உயிரிழந்துள்ளனர் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் மூதூர் பிரதேசத்தில் 5 பேரும், தம்பலகாமத்தில் ஒருவரும், திருகோணமலையில் 4 பேரும், கல்முனைதெற்கில் 8 பேரும், சாய்ந்தமருதில் ஒருவரும், நிந்தவூரில் 5 பேரும், ஏறாவூர் பிரதேசத்தில் 3 பேரும், மட்டக்களப்பு நகரத்தில் ஒருவரும், காத்தான்குடியில் 20 பேருக்கும், வெல்லாவெளிபிரதேசத்தில் ஒருவருக்கும், அம்பாறை பகுதியில் இருவருக்கும், உகண பிரதேசத்தில் 7 பேர் உட்பட 58 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை அம்பாறை உகண பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டு சிறுநீரக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் மாற்றப்பட்டு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து கிழக்கில் உயிரிழந்தோர் 9 ஆக அதிகரித்துள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 193 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் 53 பேரும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவில் 915 பேரும் உட்பட கிழக்கில் மொத்தம் 1493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதில், கொரோனா தொற்றுக்குள்ளான 595 தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவருவதுடன் 915 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.

எனவே மக்கள் எவ்வாறு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற வகையில் அந்த தொற்று எவ்வாறு வியாபித்து பரவுகின்றது.என்றவகையில் தனிமைப்படுத்தல் தங்கியிருக்கின்றது. அதனை அறியும் முகமாக தொடர்ச்சியாக சுகாதார உத்தியோகத்தர், இராணுவம், பொலிஸ், மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் இனைந்து பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றோம்.


கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரப்பகுதியில் சில கிராமசேவகர் பிரிவும், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு, திருகோணமலை நகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்ப்பட்டுள்ளது.

விசேடமாக இந்த பகுதியிலுள்ள மக்கள் சுகாதார துறைக்கும் மற்றும் கொரோனா சம்மந்தமாக செயற்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் ஒத்துழைப்பை பூரணமாக வழங்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த தனிமைப்படுத்தலை மிக விரைவில் நீக்கமுடியும்.


கிழக்கில் தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகின்றது. எனவே தொடர்ச்சியாக மக்கள் சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை கடைபிடித்துவருமாறு அவர் கேட்டுக் கொண்டதுடன் டெங்கு நுளம் பின் தாக்கம் மட்டக்களப்பில் சில சுகாதார அதிகாரிகள் பகுதிகளில் அதிகரித்துவருகின்றது. எனவே இந்த கொரோனா மற்றும் டெங்கு நோய் தாக்கம் ஆகிய இரு நோய் தாக்கத்திற்கும் இடையிலான இக்கட்டான நிலையில் இருந்துவருகின்றோம். எனவே பொதுமக்கள் தமது வீடுகளை சுகாதாரமாக பேணி டெங்கு நுளம்பை ஒழிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |