Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு- தாழங்குடா பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து!! ஒருவர் உயிரிழப்பு!



ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளிலும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே

உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கிச் சென்ற காரும் மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்சன் எனும் பெயருடைய 26 வயதுடைய இளைஞரே உயிரிந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments