கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் தலைநகர் சியோல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாடசாலைகளை மூடுமாறு தென் கொரிய அதிகாரிகள் இன்று உத்தரவிட்டனர்.
அதன்படி, தலைநகர் சியோல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாடசாலைகள் நாளை (15) செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும்.
தென் கொரியாவில், முதல் கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி பிற்பகுதியில் தொடங்கியது. வைரஸின் உச்சநிலை கடந்த பெப்ரவரியில் இருந்தது, அதன் பின்னர் தென் கொரிய அரசு எடுத்த துரித நடவடிக்கையால் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடிந்தது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்ற உலகப் புகழ்பெற்ற நாடான தென் கொரியா இப்போது வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது. தென் கொரியாவில் வைரஸ் பரவியதிலிருந்து தற்போதைய நிலைமை மிக மோசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விதிகளின்படி, தென் கொரிய தலைநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் கற்பித்தல் இந்த மாத இறுதி வரை ஒன்லைனில் தொடரும்.
தென் கொரியா சமீபத்தில் சமூக இடைவெளி மற்றும் தொடர்புடைய சுகாதாரப் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.மேலும் வைரஸின் விரைவான பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை.
அந்த வகையில் பார்த்தால், தென் கொரியா ஒரு ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறினால், அது அடுத்த கட்டத்திற்குச் சென்று நாட்டைப் முற்றாக முடக்க வேண்டியிருக்கும்.
தென் கொரியா ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார மைய நாடாகும்.
இது குறித்து தென் கொரிய பிரதமர் சுங் சூ-கியுன் கருத்து தெரிவிக்கையில், முடக்கப்படுவதற்கு முன்பு நாடு தொடர்பில் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.
எனினும்னும், வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துச் செல்வதால் தென் கொரிய அரசு கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: