Advertisement

Responsive Advertisement

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனாவால் மரணம்


இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.

தர்கா பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 05 பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும், கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments