Home » » மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்!

மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்!

 


தனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே இவ்வாறுபலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வழமைபோன்று இவர் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக தற்செயலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.

அதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் திருமணமாகாத இந்தப் பெண் தனதும் தாயினதும் வாழ்வாதாரத் தொழிலாக இவ்வாறு மா அரைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேர பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |