Home » » கிழக்கில் கடந்த 12 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 1188ஆக அதிகரிப்பு- பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

கிழக்கில் கடந்த 12 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 1188ஆக அதிகரிப்பு- பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

 


கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 85 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்க்ளின் எண்ணிக்கை 1188ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.


கடந்த 12 மணித்தியாலங்களில் பதிவாகிய கொரோனா தொற்றாளர்களாக,
திருகோணமலை மாவட்டத்தில்- குச்சவெளியில் ஒருவரும், மூதூரில் 5 பேரும், உப்புவெளியில் ஒருவரும்,

கல்முனை பிராந்தியத்தில்- கல்முனை வடக்கில் ஒருவரும், கல்முனை தெற்கில் 14 பேரும், காரைதீவில் ஒருவரும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில்- ஓட்டமாவடியில் ஒருவரும், ஏறாவூரில் 5 பேரும், மட்டக்களப்பில் 6 பேரும், வவுணதீவில் ஒருவரும், காத்தான்குடியில் 46 பேரும், பட்டிப்பளையில் ஒருவரும், ஆரையம்பதியில் ஒருவரும்,

அம்பாறை பிராந்தியத்தில்- உகனவில் ஒருவருமாக மொத்தம் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, திருகோணமலையில் 142 பேருக்கும், மட்டக்களப்பில் 204 பேருக்கும், அம்பாறை பிராந்தியத்தில் 39 பேருக்கும், கல்முனை பிராந்தியத்தில் 803 பேருக்குமாக கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1188ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பில் 2 கொரோனா மரணங்களும், கல்முனையில் 4 கொரோனா மரணங்களுமாக கிழக்கில் மொத்தம் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து திருகோணமலையின் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும், மட்டக்களப்பின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும், கல்முனையில் கல்முனை 1, 2, 3 கிராம சேவகர் பிரிவுகளும், கல்முனை குடி 1, 2, 3, கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொது மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும், கொரோனா தொற்று அபாயமுள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும், முகக்கவசங்களை சரியான முறையில் தொடர்ந்தும் அணியுமாறும், கொரோனா தொற்று அறிகுறிகள் தென்படும் நபர்கள் சுகாதார பிரிவினரை அணுகி அதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், சமூக மற்றும் தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுமாறும், முகத்தை கைகளால் தொடுவதை இயன்றவரை குறைக்குமாறும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கிழக்கு மாகாண சுகாதார பிரிவினர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |