Home » » மட்டக்களப்பில் 63 வர்த்தகர்களுக்கு கொரோனா! மூடப்படும் வர்த்தக நிலையங்கள் மேலதிக விபரங்கள்....

மட்டக்களப்பில் 63 வர்த்தகர்களுக்கு கொரோனா! மூடப்படும் வர்த்தக நிலையங்கள் மேலதிக விபரங்கள்....

 


மட்டக்களப்பில் வர்த்தகர்கள் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர், பஸார் வீதி மற்றும் காத்தான்குடி நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் என 1214 பேருக்கு இன்று பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலுள்ள வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் 665 பேருக்கும், மட்டக்களப்பு நகர் பஸார் வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் ஊழியர்கள் 549 பேர் உட்பட 1214 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை இன்று அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் மட்டக்களப்பு நகர் பஸார் வீதியில் மேற்ளொள்ளப்பட் பரிசோதனையில் காத்தான்குடியைச் சேர்ந்த 24 பேருக்கும், ஆரையம்பதியைச் சேர்ந்த ஒருவருக்கும் மட்டக்களப்பைச் சேர்ந்த 2 பேர் உட்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் 10 பேர் பரிசோதனைக்கு செல்லவில்லை.

அதேவேளை இவர்களுடன் தொடர்புடையவர்களின் வர்த்தக நிலையங்களான ரெக்ஸ்ரையில்கள், பான்சி கடைகள், குழந்தைகளுக்கான் பொருட்களை விற்பனை நிலையம் (பேபி) உட்பட் 17 கடைகளை சுகாதார அதிகாரிகள் மூடினர்.

இதேவேளை காத்தான்குடியில் 665 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன் அதனுடன் தொடர்புடைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்று திரும்பியவர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |