இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
இதன் ஆரம்ப வைபவம் கல்வி அமைச்சர் தலைமையில், கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்றையதினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகளுக்கு இந்த அனைத்து வசதிகளையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும்.
வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில் கணினித் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என்றார்.
0 Comments