Home » » கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை...!!

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிக்கை...!!

 


நாட்டிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் கட்டமாக ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


கல்வி அமைச்சின் 33/2020 சுற்றறிக்கையின படியே மேற்படி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளதோடு ஜனவரி 16 - 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் ஜூலை 30 ஆம் திகதி வரையும் (இரண்டு நாட்களும் உட்பட) மூன்றாம் தவணை ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையும் இடப்பெறவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளில் முதலாம் தவணையின் முதல் கட்டம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஜனவரி 15 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளதோடு ஜனவரி 16 - 31 ஆம் திகதிகள் வரை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளுக்கான விடுமுறைகள் வழங்கப்படவுள்ளன. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறவுள்ளது.

இரண்டாம் தவணையானது மே 17 திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் 25 புதன் கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட) இடம்பெறும். ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்றாம் தவணையானது ஆகஸ்ட் 30 முதல் டிசம்பர் 3 ஆம் திகதி வரையும் இடப்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |