Advertisement

Responsive Advertisement

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா?

 


பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கான அனுமதியை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடியும் வரை இவ்வாறு கட்டணம் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன, தற்போது 12 ரூபாவாக உள்ள அதிகுறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக தற்காலிகமாக அதிகரித்துத் தரும்படி கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார்.

மேலும் ஏனைய பஸ் கட்டணங்களிலும் அதிகரிப்பைக் கோரியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments