Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு - கல்லடி வேலூரில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

 


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


கல்லடி வேலூர், காளி கோவில் முன்வீதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதையுடைய ஆண் ஒருவரே தனது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

தற்கொலைக்கான காரணம் கடன் சுமையாக இருக்கலாம் என்ற விதத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவறுவதுடன், உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

Post a Comment

0 Comments