Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இருவருக்கு கொரோனா!


 (டபிள்யூ. டிக்க்ஷித்)

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் செய்தியாளர்களிடம் பின்வருமாறு தெரிவித்தார்.
"I.D.H இல் 5 மாணவர்கள் உள்ளனர், அவர்களில் 2 பேர் கொவிட் நோயாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 3 பேர் கொரோனா அறிகுறிகளுடன் உள்ளனர். அவர்கள் நாளை மருத்துவமனையில் பரீட்சையை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது, உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி நவம்பர் 6 வரை நடைபெறும்.

Post a Comment

0 Comments