இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள கல்வி முறையில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவரும் நோக்கத்திற்கு அமைய முதலில் பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடத்திட்டத்தினை மாற்றி அமைப்பதற்கான கருத்தரங்குகளும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்வி அமைச்சானது ஐந்து அமைச்சுக்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments: