இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை மேலும் எண்ணாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப வேந்தர்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது
இதன் பிரகாரம் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மருத்துவ பீடத்திற்கு 369 மாணவர்கள் மேலதிகமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்க் ஆணைக்குழுவின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
0 comments: