Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

9 வருடங்களுக்கு பின்பு வாக்களித்த தேர்தல் ஆணையாளர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கொழும்பு பம்பலபிட்டிய லின்சே மகளிர் பாடசாலையில் தனது வாக்கினை இன்று காலை பதிவு செய்தார்.

மஹிந்த தேசப்பிரிய தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்ட பின்னர் தனது வாக்கை அளிப்பது இதுவே முதல் முறை.. தேர்தலுக்கு பொறுப்பான அதிகாரியாக தான் வாக்களிப்பது தேர்தல் சுதந்திரத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என அவர் தொடர்ச்சியாக தெரிவித்திருந்தார்.

2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதே 2020 பாராளுமன்ற தேர்தலில் இவர் வாக்களித்துள்ளார்.

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை நிரூபணம் செய்யவே இம்முறை அவர் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Post a Comment

0 Comments