நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைகுடியிருப்பு, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் லொறியொன்று மோதியதில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, பன்னல பொலிஸ் பிரிவில் பன்னல தங்கொடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 34 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, எல்பிட்டி பொலிஸ் பிரிவில் எல்பிட்டி மாபலகம வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்து மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 25 வயதுடைய கரன்தெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, ராகம பொலிஸ் பிரிவில் வல்பொல லேக்சைட் தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளான்.
கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைகுடியிருப்பு, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் லொறியொன்று மோதியதில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, பன்னல பொலிஸ் பிரிவில் பன்னல தங்கொடுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 34 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, எல்பிட்டி பொலிஸ் பிரிவில் எல்பிட்டி மாபலகம வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்து மின்கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 25 வயதுடைய கரன்தெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இதேவேளை, ராகம பொலிஸ் பிரிவில் வல்பொல லேக்சைட் தோட்டம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்களில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளான்.
0 comments: