பெரியகல்லாறு நிருபர் லக்ஸ்மன்)
பெரியகல்லாற்றில் இரண்டு வீடுகளில் பணம் மற்றும் நகைகள் இன்று(24) அதிகாலை வேளையில் திருடப்பட்டுள்ளனஇச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 2020.06.24 அன்று அதிகாலை முற்பகல் 2.00 மணியளவில் பெரியகல்லாறு மூன்றாம் குறிச்சியில் இரண்டு வீடுகளில் பணம் மற்றும் நகைகள் களவாடப்பட்டன. அதில் ஒரு வீட்டில் 6 பவுண் நகையும் 27000 பணரொக்கம் மற்றும் ஒரு சைக்கிள் களவாடப்பட்டிருந்தன. இதனை அறிந்த வீட்டார் உடனடியாக களுவாஞ்சிக்குடி பொலீஸிடம் அறிவித்தனர்.
இவ் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments