Home » » கொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸூக்கான மூன்று புதிய அறிகுறிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி, மூக்கு ஒழுகுதல், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இரண்டு முதல் 14 நாட்களுக்கு இருந்தால் அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதே முதல் அறிகுறியாக இருந்தது.

மேலும், காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், குளிர்காய்ச்சல், நடுக்கத்துடன் கூடிய குளிர்காய்ச்சல், தசைவலி, தலைவலி, தொண்டை கரகரப்பு மற்றும் நுகரும் தன்மை அல்லது சுவை உணர்வு திடீரென குறைந்து போதல் ஆகியவையும் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளாகக் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மூன்று புதிய அறிகுறிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |