Home » » கொரோனாவும் ஆட்டுக்கூட்டமும்......

கொரோனாவும் ஆட்டுக்கூட்டமும்......


ஆடு களம் 2020
குட்டி story

கிழட்டு ஆடு மற்ற ஆடுகளை பார்த்து கேட்டது,
"கதைச்சத கதைக்கவும் ஏலாது அவேல பத்தி கதைக்காட்டி வெல்லவும் ஏலாது இந்த முற அவேல பத்தி என்னத்த கதைக்கிறது ஏதும் புது ஜடியா இருக்கே உங்களுகளுட்ட ??

உடனே எல்லாத்துக்கும் முந்திக்கொண்டு தலையா வாரதுக்கு கனவோட இருக்கிற
பெரிய படிப்பு படிச்ச ஆடு சொல்லிச்சு "நான் தலையை குடுக்கிறன்" எண்டு.

பெரிய படிப்பு படிச்ச ஆடு(கருத்த ஆடு) மலைக்கு மேல ஏறி நிண்டு சொல்லிச்சாம்
"நான் இனி மே...மே...மே...
என்டு கத்த மாட்டேன் ஜஞ்சு வயசுல இருந்து மாடுகளோட தான் வளந்தனான்" எண்டு.

உடனே மற்ற ஆடுகள் எல்லாம் கொதித்து எழுந்து உணர்ச்சிவசப்பட்டதை போல் காட்டிக்கொள்வதற்காக மொட்டை கத்தியால் கருத்த ஆட்டின் தலையை வெட்டுவதாக காட்டிக்கொண்டனர்.

கிழட்டு ஆடும் தன் பங்கிற்கு
"இனி மே...மே...மே....என கத்தமாட்டன் என்று சொன்னது கருத்த ஆட்டின் சொந்த கருத்து தான், அது ஆட்டுக்கூட்டத்தின் கருத்தல்ல " என்று வழமை போல் கண்களை மூடிக்கொண்டே சொல்லிவிட்டு
சொகுசு ப....ட்டிக்குள் சென்றது......
(வெட்டாத ஆட்டுப்பங்கும் மூண்டு நாளா நல்ல விலைக்கு வித்துச்சு)

மாசமும் மே மாசம் தானே மே....மே...மே.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |