Home » » வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் சூறாவளியாக மாறும் சாத்தியம்

காலநிலை அறிவிப்பு
மட்டக்களப்பு வானிலை அவதானிப்பு நிலைய அதிகாரி திரு. க. சூரியகுமாரன்

தென்கிழக்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கம் ஆனது இன்று (16.05.2020) சூறாவளியாக வலுவடையும். இதற்கு தாய்லாந்து நாட்டினால் முன்மொழியப்பட்ட உம்பன் (Amphan) எனும் பெயர் சூட்டப்பட உள்ளது.
இது வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது இந்த உம்பான் சூறாவளி காரணமாக இலங்கையின் சில இடங்களில் முக்கியமாக இலங்கையின் தென்மேற்கு பிராந்தியங்களில் மழை கொண்ட காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பிரதேசங்களில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமாக பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் சில பிரதேசங்களில் காற்றின் வேகம் ஆனது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் முதல் 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகள் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படுவதுடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.

இந்த இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் காற்றும் பலமானதாக வீசும். எனவே பொதுமக்கள் இந்த இடி மின்னல் தாக்கத்திலிருந்து ஏற்படும் சேதங்களை குறைத்துக் கொள்ளும் பொருட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பிராந்தியங்களைப் பொறுத்தவரையில் தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள இந்த தாழமுக்க நிலை காரணமாக ஆழ்கடல் பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் காற்றும் பலமாக வீசும். எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் நமது கடல் நடவடிக்கையின்போது அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கை தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படுவதுடன் பொத்துவில் முதல் மட்டக்களப்பு திருகோணமலை ஊடான முல்லைத்தீவு வரையான கடல் பிராந்தியங்களில் அதிக மழை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் முதல் 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.

இந்த காற்றின் வேகமானது கொழும்பு முதல் காலி அம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கடல்பிராந்தியங்களில் சற்று அதிகரிக்கக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பங்களில் இந்த காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் கடலானது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |