மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரசேத்தில் முதியவர் ஒருவர் மாமாரத்தில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாந்துறை உடையார் வீதியைச் சேர்ந்த 70 வயதுடைய கணவதிப்பிள்ளை நாகராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments