நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் இன்று முதல் வழமைபோல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் கல்முனைப் பகுதியில் தபால் நிலையம் திறக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தபால் தொலைத்தொடர்பு அமைச்சின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தின் அறிவித்தலுக்கு அமைய தபாலக ஊழியர்களுக்கான சரியான பாதுகாப்பு இன்னும் வழங்கப்படாத நிலையில் இதனைத் தொடர்ந்து கொண்டு செல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் இன்றையதினம் கல்முனை தபால் நிலையத்தில் வைத்தியசாலை மூலமாக விநியோகிக்கப்படும் மருந்து வகைகளை மட்டும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் பொது மக்களுக்குரிய வேறு சேவைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் இதனால் பொதுமக்கள் தபாலகத்திற்கு வந்து திரும்பிச் சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
0 comments: