Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு தளர்வில் அதிகம் விற்பனையாவது இவையே!!

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் மாவட்டங்களில் அதிகளவில் இரண்டு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ள நிலையில், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏப்ரல் மாதம் தொடக்கம் இது வரையில் 1022 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் அடிப்படையில்,
மதுவரித் திணைக்களமும், காவல்துறையினரும் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை உற்பத்தி செய்வதற்கே இவ்வாறு சீனி மற்றும் ஈஸ்ட் ஆகிய பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோத மதுபான உற்பத்தியை தடுக்கும் நோக்கில் காவல்துறையினரும், மதுவரித் திணைக்களத்தினரும் விசேட சுற்றி வளைப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments