அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த இலங்கையர்களை அழைத்து வர சென்ற விசேட விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறங்கியதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் 272 பேர் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு நாடு திரும்ப முடியாமல் சிக்கியிருக்கின்றனர்.
இவர்களை நாட்டுக்கு அழைத்துவர இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: