மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவன் தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கல்பிட்டி - துறையடி பகுதியில் நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணிற்கு 36 வயது என்பதோடு தற்கொலை செய்துக்கொண்டவரின் வயது 42 என காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: