காலி பூஸா கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்காக அவர்களுக்கு கடற்படையினரால் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைவருக்கும் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொண்டதன் பின்னரே, வீடுகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸா தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து இதுவரை 68 பேர் வெளியேறியுள்ளதுடன், மேலும் 31 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: