Home » » நான்கு மணி நேர விசாரணைகளின் பின்னர் வெளியேறிய ரிஷாட்

நான்கு மணி நேர விசாரணைகளின் பின்னர் வெளியேறிய ரிஷாட்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகி சாட்சியம் அளித்துள்ளார்.
சுமார் 4 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மன்னாரில் உள்ள காணியொன்று அபகரிக்கப்பட்டமை தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று மீண்டும் குற்றப்புலானாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை 10.30 அளவில் ரிஷாட் பதியுதீன், குற்றப்புலானாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் வீடமைப்பு திட்டத்திற்காக காணியை கையகப்படுத்தியமை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று முன்தினமும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இந்த காணி அபகரிக்கப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |