Home » » யாரும் தப்பிச் சென்றுள்ளார்களா? கொழும்பில் தீவிர தேடுதலில் படையினர்

யாரும் தப்பிச் சென்றுள்ளார்களா? கொழும்பில் தீவிர தேடுதலில் படையினர்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து யாரும் தப்பி ஏனைய பகுதிகளுக்கு சென்றுள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அதேசமயம் இந்தப் பகுதிகளில் இருந்து தப்பி அண்டிய பகுதிகளுக்கு யாரும் தப்பிச் சென்றுள்ளார்களா என்பது குறித்து படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத இருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பலருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அங்கிருந்து யாரும் அண்டிய பகுதிகளுக்கு தப்பி சென்றுள்ளார்களா என்பது குறித்து படையினர் தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |