Home » » மே 11 பாடசாலைகள் திறக்கப்படுமா..? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மே 11 பாடசாலைகள் திறக்கப்படுமா..? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதியன்று பாடசாலைகளை திறப்பது குறித்து சிவில் சமூக பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 13 சிவில் சமூக குழுக்களின் பிரதிநிதிகளால் இது தொடர்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த பிரதிநிதிகளில் பேராசிரியர்கள், சிறுவர் நலன் காப்பு அமைப்புக்கள்,கல்விசார் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றின் உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர்.
எவ்வித தயார் நிலையும் இன்றி பாடசாலைகளை திறப்பது என்பது 43 லட்சம் மாணவர்களை ஆபத்தில் சிக்கவைக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் எல்லா மாணவர்களையும் ஒன்றாக பாடசாலைகளுக்கு அனுமதிக்காது தேசிய பரீட்சைகளுக்கு தோற்றுகின்ற மாணவர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் அவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையை அவர்கள் செய்துள்ளனர்.

இந்தநிலையில் வகுப்பறைகளில் சமூக இடைவெளிகளை பேணமுடியும் என்று இந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை மாணவர்களுக்கு மாற்று கல்வி முறைகள் தொடர்பில் ஆராயுமாறும் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
பாடசாலைகளை திறக்கும் தீர்மானத்தை எடுக்கும்போது சுகாதார அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் ஆகியோரின் பரிந்துரைகள் தேவை என்பதையும் சிவில் சமூக பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |