வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கா மாணவர்களை அழைத்துவரச் சென்ற சிறப்பு விமானத்தில் மாணவர்கள் வந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள் இலங்கை வருவதற்கு தயாராகி இருந்தனர்.
இதன்படி பாகிஸ்தான் − கராச்சி நகரிலிருந்து 113 ஸ்ரீலங்கா மாணவர்களை அழைத்து வந்த காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளது.
குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்திலும் விமான நிலையத்திலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து இவர்கள் வருகைத்தருகின்றனர்.
மேலும் இவ்வாறு வருகைத்தரும் மாணவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பட்டு அதன் பின்னரே வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: