Home » » கொரோனாவை பயன்படுத்தி ஆட்டத்தை ஆரம்பித்த சீனா : உடனடியாக செயல்பட்ட இந்தியா

கொரோனாவை பயன்படுத்தி ஆட்டத்தை ஆரம்பித்த சீனா : உடனடியாக செயல்பட்ட இந்தியா

கொரோனாவை பயன்படுத்தி இந்திய பெருநிறுவனங்களின் பங்குகளை சீனா வாங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காராணமாக பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அனைத்தும் வேகமாக சரிந்து வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய பெரு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
அந்நிய முதலீட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |