Home » » தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் நாடு வழமைக்கு திரும்பிய பின் ஐந்து வாரங்கள் தேவை

தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் நாடு வழமைக்கு திரும்பிய பின் ஐந்து வாரங்கள் தேவை

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமாயின் நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய பின்னர் ஐந்து வார காலம் அவசியம் என தேர்தல ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,
தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல் ஆணைக்குழு இதுவரை தீர்மானிக்கவில்லை.
தேர்தல் நடத்தப்படும் தினம் எனக் கூறி பல்வேறு வதந்திகள் பரவி வருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணப்படும் அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |