முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் அனைத்து விடுமுறைகளையும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு அமைச்சினால் ரத்து செய்யப்படுவதாகவும் எனவே, அனைத்து படைவீரர்களையும் தத்தமது முகாம்களுக்கு திரும்பி சமுகமளிக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின் தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: